Thursday 3 March 2016

மறுமப் பெண்

ஏதோ ஒற்றை தொலைத்தது போல்
ஒரு ஏக்கத்தோடும் எதிர் பார்ப்போடும்
அந்த ஜீவன் காத்திருக்கும் தினம்.

நானும் பார்த்திருக்கேன் தினம் தினம்.
என்னைக் கண்டும் காணாது போல்
அமர்ந்திருப்பாள் அவள்.

எனக்குள்ளே எழும் கேள்விகள்
ஏராளம் தான் ஆனால் வாய் திறந்து
கேட்க வில்லை நானும்.

அழகுப் பதுமை என்று சொல்வதற்கும்
இல்லை அலங்கோலமான தோற்றம்
என்று கூறி விடவும் முடியாது.

ஒரு சமயம்  அவள் கண்ணை உற்று
நோக்கினால்  பிரகாசமான ஒளி
தென்படும் ஆனந்தக் கற்பனையில்
அவள் அமந்திருப்பது போன்று
தோன்றும்.

சில நாள் சென்று பார்க்கும் போது
அவளின் கண்கள் சிவந்து கன்னங்கள்
ஒட்டிப் போய்   அழுத முகம் போல் காட்சி
கொடுப்பாள்.

இன்று வரை நான் அவளிடம் பேச்சுக்
கொடுத்ததில்லை அவளிடம் சிக்கி
உள்ள மர்மத்தை அறிய என் மனம்
துடிக்கும் துடிப்புக்கும் எல்லை இல்லை.

           

No comments:

Post a Comment