Wednesday 31 October 2018

யார் கவிஞன்


எழுதுகோல் எடுத்தவர்கள் /
எல்லோரும் எழுத்தாளன் இல்லை/
கவிநூல் தொகுத்தவர்கள்
எல்லோரும்   கவிஞனும் இல்லை /

சிறு பிள்ளை தனமாக
கிறுக்குவது எல்லாம் /
இலக்கணக் கவிக்கு
ஒப்பானதும்  இல்லை /
இருந்தும் இதை நான்
தப்பாகக் கூறவுமில்லை/

இலக்கணம் படித்ததில்லை/
தலைக்கனம் எனக்கு இல்லை
இவைகள்  வைரமுத்துவின்
சிறு வரிகள்/
நானும்  இலக்கணம் பயின்றதில்லை
அதனால்  தானோ நான் அறியேன்/ தலைக்கனம்  என்னை நெருங்கவில்லை/

திறமையான எழுத்தாளர்கள் /
எத்தனையோ பேர்   எங்கங்கோ 
ஒரு  ஓரமாக இருந்து எழுதிக்
கொண்டு  தான்  இருக்கின்றார்கள்/

உண்மை நிலவரங்களை
கவிதையாக தொகுத்தபடியே /
ஒளி கொடுக்க தனக்கும் ஒரு வழி
பிறக்க வில்லையே என்று ஏக்கத்தோடு / அந்த ஏக்கத்தையும் கவிதையாகக்  கொடுத்தவண்ணமே/

உயர்ந்த  உள்ளமே இவர்களுக்குக்
கொடுங்கள் பிடி போல் ஒரு தடி /
உனக்கும் கிடைக்கும் வெற்றிப் படி/

இதை  விடுத்து நல்ல பாம்பு 
ஆடுகிறது  என்று மண்புழுகும்
ஆடிச்சாம் என்னும்  கதைபோல்  /
கவிதை  என்னும் பெயரில்  சில சில்மிஷதண்மை   கொண்ட
கிறுக்கல்களுக்குக் கவிஞர்  பட்டமும்/
பணமும் வாரிக் கொடுப்பதால்/
மன நிறைவான. ஒரு நிலை
உனக்குக்   கிட்டப்போவதில்லை \

உணர்வுக் கவிஞர்கள் எல்லோரும் /
எட்டி நின்று  புன்னகைக்கின்றார்கள்/
இந்தக்  கவி பட்டத்தையும் கேலிக் கூத்தையும் கண்டு /
புரிந்து செயல் படுங்கள்
புகழ்ச்சி  நாடி  ஓடும் மண்டுகளா/

     

No comments:

Post a Comment