கலைவாணிக்குத் திரு நாளாம்.
கலைமகளுக்காகவே
ஒதுக்கப் பட்ட பெருநாளாம் .
பிரனவ மந்திரத்தின் தலைவி.
பிரமனையே ஆட்டி வைக்கும்
அறிவுக்கு அரசி.
வெள்ளை உடை தரித்து.
வெள்ளைத்தாமரைப் பூவில் அமர்ந்து.
வீணை மீட்டும் ராணி.
பிள்ளைத் தமிழோடு உறவாட வா நீ./
ஞாபக சக்தி என்னும் ஒளி ஏற்றி.
புத்தியை விரிவாக்கி .
நெஞ்சத்தின் மத்தியில் நீ நுழைந்து.
என்னுயிர் கலந்து அருள்வாய்யம்மா .
கல்விக் கடலே கல்யாணி .../
அனைவருக்கும் கலைவாணிஅருள் கிடைக்க வாழ்த்துகள் 😊❤🙏
No comments:
Post a Comment