நூலகம் எரிந்து விட்டால் மூடனே ..!
தமிழ் வீழ்ந்து விடுமோ கூறடா...!
எண்ணற்ற நூல்கள் நிலத்தோடு போனதே...!
எழுத்துக்கள் கரும்புகையாக விண்ணோடு கலந்ததே...../
தீயிட்டு எரித்தும் தோற்றுப் போனாயடா...!
தேசமெங்கும் அழிவுற்ற காகிதத்தின் பேச்சுதானடா...!
அக்கினிக் குஞ்சுகள் வாழும் நாடடா...!
எரித்த புத்தகத்தால் எழிச்சி கண்டோர் .."
இன்னும் வீழ்ச்சி கொண்டதில்லை கேளடா....../
வண்ணத்திலான வடிவ அட்டைக் குறிப்புக்கள்...!
வரலாறு கூறும் பல ஏடுகள் ....!
வழக்காடா வழி காட்டும் பதிப்புக்கள் ....!
வந்து அமர்ந்த வெண் சுவர்கள் ...../
தோற்றம் மாறிக் காட்சி கொடுக்கிறதே....!
தாயக மக்கள் மனம் வாடுகிறதே.....!
புண் பட்ட நெஞ்சங்களும் கண்....!
வியர்க்கப் பார்த்து மகிழ்ந்த இடமெடா.../
ஊர்கள் தேசங்கள் நாடுகள் கடந்து....!
எத்தனையோ வாசிப்புத் தாள்கள் அடுக்கிய ...!
அற்புத அறைகள் கறுப்பாய் போனதடா...!
ஆன்றோர் சான்றோர் ஆட்சி புரிந்தோர்...!
அத்தனை பேரின் புகழ்களையும் ஏந்தியவையடா ...../
மண்ணுக்குப் போர் இட்டு மண்டியிடாதவன் ! மணலிலே மதிப்பு உள்ள ஆக்கங்கள் ! எரியூட்டப் பட்டவை கொடுமையடா....!
அறிவுப் பாதை திறக்கும் அறிஞ்சியத்தை...!
கரியாக்கியவன் இன வாத மடையனடா....../
ஆசியாக் கண்டத்திலே தலை சிறந்த...
குறுந் தொகுப்புக்களை இழக்க நேர்ந்ததடா ....!
பார்த்ததுமே தமிழன் விழிகளுக்கு வலியடா...!
எரிந்தது நூலகமா? இல்லை தாயகமடா ..!
புரிந்தவர் நெஞ்சத்தில் வேதனை பூகம்பமானதடா....../
No comments:
Post a Comment