Wednesday 31 October 2018

மாமனே

உன் தோள் சாய வேண்டும் /
உன் முத்தம் தின்னும்
பாவை நானாக வேண்டும்/
உன் கன்னம் கிள்ளும்
குழந்தை நானாக வேண்டும் /

உன் மடி சாய்யும்
பெண்  நானாக வேண்டும்/
உன் உடலோடு உடல்  உரச
அமரும் மங்கை நானாக வேண்டும்/

உணவில் பங்கு கொடுத்து /
படுக்கையறையில் பங்கு எடுத்து/
உன்னை பொம்மை போல் /
அள்ளி அணைத்து /
தள்ளி விளையாடும் /
பதுமை நானாக வேண்டும் /

உன் கனவில் தோன்றும்
முகம்  என் முகமாக வேண்டும் /
உன் கவிதை வரிகளின்
கருப் பொருளாய் நானே
இணைந்திருக்க வேண்டும் /

இத்தனை கற்பனையோடு /
அடியெடுத்து வைக்கையிலே /
பாதத்தில் ஆழ் முத்தம் பதித்தது /
மலரோடு மறைந்திருந்த முள்ளடா மாமனே /

  

No comments:

Post a Comment