நானே நானேதான்/
என்று எண்ணி இருந்தேன்./
அத்தனையும் மாற்றியது நீதானே\
ஒவ்வொரு தடவையும் /
இதயம் துடிக்கும் போது எனக்காகவே/
என்று எண்ணி இருந்தேன்/
அது இல்லை என்று ஆகிப் போச்சு /
அதன் துடிப்பானது /
உனக்காகவே மாறிப் போச்சு /
என்று அறிந்து கொண்டேன்/
எலும்பு கொண்டு வேலி இட்ட பின்னும் /
உள் மனதிலே முழுமையாக நீ தான் /
என்று உணர்ந்து கொண்டேன்.\
வேலி தாண்டி சென்றாயா?
இல்லை விழினியிலே குழி தோண்டி /பாதை அமைத்துச் சென்றாயோ ? நான்அறியேன் /
உலாவுகின்றாய் உடலினிலே/ குருதியோடு சேர்ந்து ஊர் அறியாமலே/
உள் இருந்து குடிக்கின்றாயே நீ என் உணர்வுகளை /
வளர்க்கின்றாயே உணர்ச்சிகளை /
துடிக்கின்றேன் தூக்கம் மறந்து நான் /
No comments:
Post a Comment