கவிதையின் நாயகன்.
காவியத் தலைவன்.
இசை இயல் வரிகளுக்குச் சொந்தக் காரன்.
எளிமைச் சொற்கள் கொண்டு
இனிமையான பாடல்களைக்
கொடுத்த வித்தகன்./
தன் வாழ்க்கை நிகழ்வுகளைக்
கணித்து தத்துவ வரிகளாக
மாற்றிய வல்லமை மிக்கவன்.
காம வரிகளையும் கலந்து
காதல் கனி கசிந்து தேன்
சுவையூட்ட காதல்
பாடல்களைப் புனைந்த சித்தன்./
இறை பக்தி இன்றி
பட்டி தொட்டியெல்லாம்
பக்திப்பாடல்களை
ஒலிக்கச் செய்த பித்தன் ./
தூக்கத்துக்கு அருமருந்தாக
தேன் தமிழ் எடுத்து தாய்ப்பால்
ஊட்டும் உணர்வோடு
தாலாட்டுப் பாடல்களைக் கொடுத்து மறைந்த கவிஞன்./
இறந்தும் இசையால் வாழ்ந்து கொண்டு இருக்கும் கவிஞர் கண்ணதாசன் நினைவு நாளாகிய இன்று நாமும் நினைத்துப் பார்ப்போம் ஆத்மா சாந்திக்கு
இறைவனைப் பிராத்திப்போம் /
No comments:
Post a Comment