Friday 26 October 2018

#முகநுலில் #கடவுள் #இருந்தால்

வரம் ஒன்று கேட்பேன்.
முகநூல் கடவுளிடன்/
கண்டும் காணாதவை போல்.
கடந்து செல்லும் குணத்தைக் கொடு /

கனக்கும் மனசுக்கு விடுதலை
கொடு /
நட்பாக நெருங்கி நயமாய்ப் பேசி /
வலி கொடுத்து விலகும் நவர்களை /
எண்ணிக் கலங்காமல்
இருங்கும் இதயம் கொடு /

நேற்று உரையாடி இன்று
உறவைத்  துண்டிக்கும் /
மனிதர்களை உடனுக்குடன்
தண்டிக்கும்  வல்லமையைக் கொடு /

விருப்போடு உறவாடி /
உரிமையோடு  கதை கூறி /
காரணம் கூறாது வெறுப்போடு
விலகுவோரை கடுகாய் வறுத்தெடுக்க
வீரியமான வார்த்தைக் கொடு /

நடிப்புக்கு குறைவு இல்லை /
பிடிப்பு என்று சொல்ல யாருமில்லை /
அகத்தில் தூய்மை இல்லை /
முகத்தில் ஆயிரம் முல்லை/

தோள் கொடுக்கும் தோழனுமில்லை /
துணையாய் வரும் தோழியுமில்லை /
இது போலிகள் உலாவும் எல்லை /
உண்மைகள் நுழைய அனுமதியில்லை /

நல்லதோர் நட்பு நல்லதோர் தளம் /
நல்ளோர் உலவும் நிலம் /
நியாயமான மனிதர்களின் இருப்பிடம் /
நிச்சயம் நிம்மதி  இங்கே மலரும் /
என்று நம்பிக் கெட்டது இந்தப்பிள்ளை /

எல்லோர் போலும் போலிக்குப் போலியாய் /
பொய்யனவர்களுக்குப் பொய்யானவளாய் /
சந்தர்ப்பவாதிகளில் நானும் ஒருத்தியாய் /
உயிரான உறவுக்கு  உயிர் கொடுப்பவளாய் /

உதறித் தள்ளியோரை மதியாதவளாய் /
மதிப்பற்றோரை மிதித்து நடப்பவளாய்/
பிரிந்த நொடியே மறந்து சிரிப்பவளாய் /
நட்புஎன்னும் போர்வை போர்த்தியவளாய் /

நானும் இங்கே வலம் வர வேண்டும் /
அதற்கு எந்த வகை வரம் உண்டோ?
அதில் கொஞ்சம் கொடுத்தருள்வாய் /
என்று வரம் கேட்பேன் கண் மூடி நின்று  /🙏

   

ஓவியருக்கு வாழ்த்துகள்

No comments:

Post a Comment