பொன் நகை அணியாத
பெண் முகம் பார்த்தேன் /
பூலோகக் கண்ணழகியென
வியர்ந்தேன்/
செவ்விதழ் சிந்திய
சிறு புன்னகை பார்த்தேன் /
நெஞ்சம் மயங்கி
கவிதையில் விழுந்தேன்/
மெல்லிய வண்ணச் சேலை /
சிக்கனப் பிடித்துள்ள /
சிறு இடை பார்த்தேன் /
அசையும் வண்ணமலர் /
தோட்டமென நினைத்தேன் /
கலைந்த கூந்தல் /
அதில் நுழைந்து விளையாடும் /
தென்றலைப் பார்த்தேன் /
அன்றோடு அதை வெறுத்தேன் /
கொன்றை மலர் கொண்டைக்காரி/
கொஞ்சும் தமிழ் கேட்டு விருப்பானேன்/
தெள்ளுப் போல் தெறிக்கும் /
குறும்புக் காரியென நகைத்தேன் /
அவள் மேலே காதல் கிறுக்க நானேன் /
வெண்ணை போல் மேனிக்காரியை /
விருப்போடு அழைத்தேன் /
தென்னை போல் நிமிர்ந்தாள்
நாணல் போல் வளைந்தாள்
பட்டாம்பூச்சியாய்ப் பறந்தாள் /
பருவமங்கையவளின் வெட்கத்தையே பரிசாகக் கொடுத்தாள் /
No comments:
Post a Comment