நான் அமைதியானவள் -அல்ல
அமைதியாக்கப் பட்டேன்/
நான் அடங்கிப் போகின்றவள் இல்லை
அடைக்கி ஒடுக்கப்பட்டேன்/
நான் கூண்டுக் கிளி அல்ல
ஊராரின் சம்பிரதாயம் என்னும்
வேலிக்குள் அடைக்கப்பட்டேன் /
நான் நாகரிகம் தெரியாதவள் இல்லை
நடை உடை பாவனைக்கு சமுதாயம்
தடை போட்டு விட்ட பாவியானேன்/
ஆயிரம் எதிரி எதிரே வந்தாலும்/ எதிர்த்து நின்று போரிடும் பிறவி நான்./
ஊர் வாயால் வெளியாகும் /சொற்களை எதிர்க்க முடியாத கோளையானேன்/
பொல்லாத சமுதாயத்தைக் கண்டு குமுறுது நெஞ்சம் என்றென்றும்/
எரிமலையாக வெடித்துச் சிதறினால். தாங்குமா? இன்றும் /
இந்த உலகம் எனக் கேட்கின்றேன்/
அனல் தெறிக்கும் தீப்பொறி
சொல் எடுத்து /
சுட்டெரிக்கும் வார்த்தைகளைக்
கொண்டு விட்டெரிப்பேன்/
வீனாய்ப் போன சமுதாயத் தடைகளை/
விதவை என்ற ஏற்ற தாழ்வான
மூட நம்பிக்கையை
விட்டொழிக்கும் வரை /
காட்டுத் தீயாக நின்று எரிப்பேன் /
No comments:
Post a Comment