Monday 15 October 2018

மலர்


அழகைப் பெருக்கும்
மலர் ரோஜா..!!

அறிவைப் பெருக்கும்
மலர் செம்பருத்தி..!!!

முகப் பொழிவு கொடுக்கும்
மலர் தாமரை..!!!

கூந்தல் மணக்க உதவும்
மலர் செண்பகப்பூ...!!

வயிற்று வலியைப்
போக்கும் மலர்
இலுப்பை...!!!

சிரங்கைப் போக்கும்
மலர் வேம்பூ...!!

தூக்கம் கொடுக்கும்
மலர் மருதாணி...!!!

கொசுத் தொல்லையை
விரட்டும் மலர் துளசி...!!!!

கண்ணுக்கு குளிர்ச்சி
ஊட்டும் மலர் மல்லிகை...!!

சமைக்க உதவும் மலர்
அகத்தி...!!!

ஆண்மையை விரிவு படுத்தும்
மலர் முருங்கை...!!!

சிவனுக்கு உகந்த மலர்
திருக்கொண்றை...!!!

சனீஸ்வரனுக்குப் பிடித்த
மலர் நீலக்காகமகணை...!!!

காளிக்குப் பிடித்த மலர்
காட்டுமல்லி...!!!

காய்ந்த பின்னும் மணக்கும்
மலர் தாழம்பூ...!!!

தேன் சுரக்கா மலர்
வாடாமல்லி...!!

தெருவல்லாம் பூக்கும்
மலர் கடதாசி...!!!

கருங்கூந்தலை அலங்கரிக்கும்
மலர் குண்டுமல்லி...!!!

இரு மனம் இணையும்
திருமணத்தில் தூவும்
மலர் பவழமல்லி...!!

மனம் இன்றி திருமணம்
நடக்கும் மலர் இன்றி
நடக்குமோ...!!!

வாழ்க்கையிலே மலரும்
நம்மில் சரி பாதி...!!!

வாழும் போதும் இறந்து
போகும் போதும் கூடவே
வருகின்றது மலர்...!!!

மலரே உனக்கு மலர்
எனப் பேர் வைத்த
தந்தை யார்...!!!

வண்ணம் தீட்டா
மலரை எண்ணப்படியே
அடைகின்றான் மனிதன்...!!

மலருக்கு மணம் மட்டும்
இல்லை உயிரும் உண்டு
என்பதை மறக்கின்றான்...!!

நடக்கையிலே பிடித்துப்
பறித்து கசக்கியே
எறிகின்றான்...!!!

வாடிய  பின்னும்
தேடி வரும் காற்றோடு
சேர்ந்து வாசம்....!!!

No comments:

Post a Comment