Wednesday 17 October 2018

கலங்காமல் காத்திரு


செந்தமிழ்  எடுத்து
செவ் வண்ணத்தை விடுத்து.
கருநீல மை கொண்டு கடிதம்
வரைந்து  விட்ட தேவதையே ........////////

தித்திக்கும் வரிகளிலே முக்கனி
போல்  கவி வடிவில் கத்தரித்த வார்த்தைகளைக் கொண்டு 
காதல் தூது விட்ட தேனமுதே ....///

சிலர்  சித்தரித்த நாடகத்தால் சின்னாபின்னமாகப் போனதடி
நம் காதல் அதை நினைத்து வருந்தாமல் இல்லையடி நானும் நாயகியே ....////

அன்று சினம் கொண்டு நீ திட்டியவையும் கலங்கிய கண்களோடு ஓடியவையும்
என் விழியில் நின்று தினம்  கொன்றதடி தூக்கத்தை ....///

அன்புக்கு அழிவு இல்லை உண்மைக் காதல் இறப்பதில்லை என்னைப் போல் நீயும் துடித்த படியே இருப்பதை அறிந்து விட்டேன்
உன் உருக்கமான மடல் கண்டதும் .....////

அடங்கி இருக்க மாட்டேன்  இனிமேலும் நான் அருவாள் கொண்டு படை எடுத்தாலும் துணிந்து வருவேன் துணையாக உன்னைக் கரம் பிடிக்கவே கலங்காதிரு கண்மணியே ...../////

              

No comments:

Post a Comment