பாதை நோக்கி நடக்கையிலே/
நேருக்கு நேராக முகம் பார்த்தது/
விழி மெது மெதுவாக மொழி/
வழியே உரையாடல் ஆரம்பித்து /
அவனுக்கும் அவளுக்கும் /
அறிமுகம் அன்பாக மாறி/
அன்பு ஆழமானது /
அந்த ஆழ்கடலிலே காதல் /
படகு உருவானது /
உறவாக. உரிமையோடு /
மகிழ்வாக மணநாள் கனவோடு
உலா வந்தது /
எதிர் வீட்டுப் பெண்ணாள் /
இரு வீட்டுக்கும் செய்தி பறந்தது /
இறக்கை இல்லாமலே/
பறந்த செய்தி எரிச்சல் மூட்டியது/
மாப்பிள்ளை வீட்டிலே பதட்டத்தையும்/
கண்ணீரையும் கூட்டியது /
பெண்ணின் இல்லத்திலே /
இரு வீட்டார் சந்திப்பு
நடுவராக நாட்டாமை /
விவாதம் ஆரம்பம்
விட்டுக்கொடுக்க வில்லை/ மாப்பிள்ளையின் அன்னை /
வெட்கம் விட்டுக் கெஞ்சினார்/
பெண்ணை பெற்ற தந்தை /விடாப்பிடியாக அவள் அள்ளுகிறாள்/ சீர்வரிசைகளை வார்த்தையிலே/
மெது மெதுவாக மகனை/
தோளைப்பிடித்து தள்ளுகிறாள் /
நாட்டாமை எழுந்து விட்டார் /
எல்லாம் முடிந்து விட்டது/
அவன் அவளோடு இனிக்க இனிக்க/ பேசிய வார்த்தைகளும் /
இறுக்கி அணைத்த நாட்களும்/
மட்டும் அவள் மனதில் அமர்ந்து விட்டது/
நான்கு கண்ணும் நோக்கிய /
கடைசி நாள் அன்று முடிந்து விட்டது /
அவள் விழி நிறைய நீர் கிறங்கி விட்டது / மொழி மறந்து இறகு உடைந்த
கிளியாக ஆனாள் அவள் /
சீர் கொடுக்க வழி இல்லை/
கூடி வரும் வயதை தடுக்க
இயல வில்லை /
முதிர் கன்னியாய் இல்லத்திலே /
அந்த மங்கையின் வாழ்க்கை/
புரியாத புதிராக உள்ளத்திலே./
வாழ்வென்னும் புதிர் விடையறியா/
விதி அவளோ ஆனால் முதிர்கன்னியாய் ./
No comments:
Post a Comment