கலையா ? நான்
சிலையா? கள்வனே./
கலையாத கூந்தோலோடு
நிலையாக நின்று விட. /
என் மோகனப்
புன்னகை மறந்தேன்/.
மோதி விடும்
தென்றளிலும்
சூடு உணர்ந்தேன்./
விரல்களை அசைத்து
விரதமாக ஆடுகிறேன்./
விழிகளை விட்டு உன்
வரவைத் தேடுகிறேன்./
ராகமும் சுருதி மாறவில்லை. /
தாளமும் ஜதி தவறவில்லை. /
என் பாதம் மட்டும்
ஒரு நிலையில் இல்லை./
அரிதாரம் பூசி வந்தேன். /
குண்டுமல்லி சூடி நின்றேன். /
அழகு பதுமையாகக் காட்சி தந்தேன்./
ஆனாலும் என் கருவிழி
இரண்டும் கலங்குதையா./
அதற்குக் காரணம்
நீ தான் என் கள்வனே./
உருகும் மெழுபோல்
இன்று நான் அரங்கினிலே /
தாங்கொன்னாத் என்
துரயத்தோடு கள்வனே/.
No comments:
Post a Comment