Monday 28 January 2019

தாயும் சேயும்

பாப்பா தட்டி சுட்ட பிட்டு /
தேங்காய்  சுரண்டி எடுத்த
சுரட்டை கொண்டு  சுட்ட பிட்டு/ 
ஈர மண்ணை தொட்டு எடுத்து
சுட்டாள் இரண்டு பிட்டு /

துட்டுக்கு கூவி விற்கின்றாள் /
அதை வாங்கும் படி அன்னையிடம்
அடம் பிடித்து நின்கின்றாள்  /
துட்டைக் கொடுத்து பெற்றுக்
கொண்டாள் அன்னை  /
அதை உண்டு சுவையைக்
கூறும் படி குதித்து அழுகிறாள் பாப்பா /

தன் மழலையின் அழுகையை
முடிவுக்குக் கொண்டு வரவே /
ஈர மண்ணை எடுத்து வாயிலே
போட்டாள் அன்னை /
ஈர மண்ணை விட தாய் உள்ளம்
ஈரமானது /
என்று அறியாத மழலை 
சிரித்து மகிழ்கின்றாள் /

அன்னையை  அணைத்து /
தோளிலே தொங்கி மகிழ்கின்றாள் /
அன்பு முந்தம் பதித்து  மகிழ்கின்றாள் / பாப்பா தன் பிட்டை தாய் உண்டது கண்டு /
பத்து மாதம் சுமந்த தாய் மனம் /
பூரிப்புக் கொள்கின்றது நின்று/

No comments:

Post a Comment