Monday 21 January 2019

உள்ளத்தை தூய்மைப் படுத்து

ஊரை உலவு பார்ப்போர்
உள்ளத்தைத் தான் முதலில்
உழுவ வேண்டும் /  .ஏன்? எனில்
அங்கே தான் புல்லோடு
முள் செடியும் முளைத்திருக்கும் /
கூடவே விசக் கொடியும் படந்திருக்கும் /

உள்ளம் தூய்மையானால்  /
வெள்ளோட்டம் போல் பேச்சு இருக்கும் /
மனமோ கள்ளத் தோணி ஓட்ட மறுக்கும் /
உண்மை செழிப்புற்று மலர்ந்திருக்கும் /

சொல்லப் போனால் நல்லவைகளையே
நாடும் குணம் இருக்கும் /
அடுத்தவனை வேகு பார்க்கும்
எண்ணம் அறுக்கப் பட்டிருக்கும் /

ஆராய்ந்து பார்த்து இரு பக்க
நியாயம் பார்த்த பின்பே தான் /
தூற்றவோ போற்றவோ
புறப்படும்  புரிதல் விரிந்திருக்கும் /

No comments:

Post a Comment