Monday 21 January 2019

மன்மதரே

தக்காளி  தோட்டத்திலே
வைத்து சோக்காளி மகளே
என்று கன்னம் கிள்ளியவரே ..../

மல்லிகைத் தோட்டத்தில்
வைத்து மார்வுச் சேலை
நீக்கிடவே நெருங்கி வந்தவரே .../

மாந் தோப்பில்
மறைந்திருந்து
இழுத்து அணைத்தவரே .../

கரும்புத் தோப்பில்
வைத்து குறும்பு 
பண்ணிய சின்னவரே..../

வாழைத் தோப்பில்
வைத்து வாழ்க்கை 
கொடுப்பேன் என்று
சத்தியம்  செய்தவரே ../

வேம்பு நிழல் அமர்ந்து
வெட்கம்  திறந்து
என்ன என்னமோ
கதை  அளந்தவரே .../

கெண்டைமீன் கொண்டு வந்து
கண்ட படி கண்ணை மேய விட்டு
என்னைக் கடந்து செல்கையிலே காத்திருக்கின்றேன்
ஆற்றங்கரை ஓரத்திலே
எனக் கூறிச் சென்றவரே ..!

சாலை ஓரத்து பனை
மரத்தின் ஓரம் நின்று
சர சரப்பு இல்லாமல்
என்னை முன் பின் தொடர்ந்தவரே ....!

முன் இருட்டு வேளை
வந்து கொல்லைப்புரம் நின்று
கரடு முரடான பிடியோடு
என் கையைத் தொட்டு
கண்ணாடி  வளையல்களை
நொறுக்கிய மன்மதரே ..!

No comments:

Post a Comment