Thursday 24 January 2019

தூது ஒன்று

ஏற்றத்திலே நீர் இறைத்து /
இளஞ்சூடாக்கி விட்டேன் /
முற்றத்திலே பாய் விரித்து/
முறுக்கோடு
தேனீரும் எடுத்து வைத்தேன் /

கலைந்த கூந்தலை சடையிட்டு /
வட்ட முகத்திலே பொட்டும் இட்டேன் /
கொட்டப்பாக்கும்
கொழுந்து வெத்தலையும் போட்டு /
இதழ் இரண்டையும் சிவக்க விட்டேன் /

மாமானின் வரவைக் காணோமே  ?
நேரமும் கடக்கிறது பொழுதும் மறைகிறது/
ஏதேதோ எண்ணி மனம் துடிக்கிறது /
யார் கொண்டு வருவார் தூது ஒன்று/

             

No comments:

Post a Comment