Saturday 30 May 2020

ஓவியக் கவிதை


கரும்பாக இனித்திடாத வாழ்வு /
காரணம் தான் என்ன?
இது வேம்பில் பூத்த பூவு/

கானல் நீரில் பயணம் /
காரணம் தான் என்ன?
இது கவலைக்குள் 
விதையிட்ட மரத் தோணி/

இன்பக் கனவு பொங்காத உறக்கம்/
காரணம் தான் என்ன /
பாழடைந்த மாளிகையிலே 
நித்தமும் தூக்கம்/

சந்தோசம் இவளுக்குத் தோசம்/
காரணம் தான் என்ன?
தன் விதி அறியாத பிள்ள/

ஆதரிப்போம் என்போர் எல்லாம் /
அடுத்த நாட்களோ எட்டத்திலே/
பாசம் பகிர்வோம் என்போர் எல்லாம்/
பகல் கனவின் வட்டத்திலே/

காரணம் தான் என்ன?
சொல்லி விட்டால் தொட்டு 
விடும் கவலை உன்ன/


No comments:

Post a Comment