Wednesday 6 May 2020

திறவாயோ என்னிதம்


உள்ளத்து ஆசையை அள்ளி 
வந்தேன்./
உணர்வின் ஓசையைச் சொல்லிட 
வந்தேன்./
ஊற்றாகும்  மோகத்தைத் திரட்டி 
வந்தேன்./
ஊசிமலைக் காடு கடந்து
வந்தேன்./

விதையிட்ட காதலோடு வேகமாய்
விரைந்தேன்./
விரிந்த மலராக பறந்தே
விரைந்தேன்./
விருட்சமாகிடும் பாசத்தைப் பகிர்ந்திட
விரைந்தேன்./
விளையும் கனவையும் சுமந்து
விரைந்தேன்./

ஓடை நீராக ஓடியே  நாடினேன்/
கார்கால மேகமாய் கலங்கியே
வாடினேன்/
இரவு  பகல் மறந்து தேடினேன்/
மௌனப் பூட்டை திறவாயோ
என்னிதயமே/


No comments:

Post a Comment