உள்ளத்து ஆசையை அள்ளி
வந்தேன்./
உணர்வின் ஓசையைச் சொல்லிட
வந்தேன்./
ஊற்றாகும் மோகத்தைத் திரட்டி
வந்தேன்./
ஊசிமலைக் காடு கடந்து
வந்தேன்./
விதையிட்ட காதலோடு வேகமாய்
விரைந்தேன்./
விரிந்த மலராக பறந்தே
விரைந்தேன்./
விருட்சமாகிடும் பாசத்தைப் பகிர்ந்திட
விரைந்தேன்./
விளையும் கனவையும் சுமந்து
விரைந்தேன்./
ஓடை நீராக ஓடியே நாடினேன்/
கார்கால மேகமாய் கலங்கியே
வாடினேன்/
இரவு பகல் மறந்து தேடினேன்/
மௌனப் பூட்டை திறவாயோ
என்னிதயமே/
No comments:
Post a Comment