நோக்கும் விழி வழியே
வந்திடலாம்/
பேசிடும் மொழியோடும் நீ
கலந்திடலாம்/
அடி நெஞ்சத்திலே தயங்காது குடியேறிடலாம் /
ஆனந்த ராகம் இன்றே பாடிடலாம் /
உல்லாச வாழ்வை எந்நாளும்
கண்டிடலாம்/
அன்பே என்னில் உன்னை
இணைத்திடுவேன்/
உயிரினில் பெயரை முத்திரை
குத்திடுவேன்/
பருவ பானமதை பகிர்ந்து
கொடுத்திடுவேன்/
முதுமையிலும் துணையாய்த் தோள் சாய்த்திடுவேன் /
முள்ளானாலும் உன் பாதையிலே பயணித்திடுவேன்/
வெட்கத்தை வீசி விட்டு
வா/
காதல் வலையை விரித்து
வா /
உறவாடிட. நீயும் ஓடி
வா/
உள்ளமதை திறந்தேன் விரைந்து
வா/
கயவனே உத்தரவின்றி உள்ளே வா/
No comments:
Post a Comment