இருண்ட பாதையில் உருண்டு ஓடும்
நம் காதலுக்கு விடிவு தோன்றிடுமா ?
இதயறையில் விழித்திருந்து ஏங்கும் நம்
ஆசைக்கு ஓர் விடிவு தோன்றிடுமா ...?
தவிப்போடும் துடிப்போடும்
எதிர் காலக் கனவுகளோடும்
கலங்கும் விழிக்கு விரைந்து
முடிவோடு விடிவொன்று தோன்றிடுமா ?
இரு கரம் சேர்த்து இருவரும்
ஒன்றாக வலம் வர காத்திருக்கும்
மனசுக்கு அழகிய விடிவு தோன்றிடுமா .?
No comments:
Post a Comment