Wednesday 20 May 2020

நிழல்களைத் தேடி


ஊர் இழந்து உறவு இழந்து/
உண்ண உணவின்றி 
நான் அலைந்தேன்/
புது வரவு ஒன்று வந்து/
துணையென்று கூறி
தோள் கொடுத்தது/

அன்று முதல் 
இன்பம் கொண்டேன்/
அடுத்தடுத்து வாழ்க்கையில்
துன்பம் கண்டேன்/
கை கொடுத்த 
உயிர் நிலைக்கவில்லை/
கைம்பெண் என்னும்
பெயர் எடுத்தேன் /

இன்று கண்ணீரில் 
மிதந்தவாறு வாழ்கின்றேன்/
பொல்லாத உலகினிலே 
வாழ்வது அக்கினிப்பிரவேசம் /
ஊனக் கண்களோ
ஊர்ந்து கொல்கின்றது/
காத்திடும் நிழல்களைத் தேடி ஏங்குகின்றேன்/


No comments:

Post a Comment