திருட்டுத் தனமாய்
இருட்டு இதயறையில்/
எலும்பிலும் முட்டாமல்
குருதியிலும் தட்டாமல்/
நுழைந்து விட்டாய் /
நுழைந்த நீ நெஞ்சணையில் /
உறங்கிட வேண்டியவை தானே /
இல்லையெனில் ஒரு ஓரமாய்/
கம்முனு இருந்து தொலைந்திடலாமே/
உறக்கத்தைக் களைக்கிறாய் /
உணர்ச்சியைக் கிள்ளுறாய் /
உணர்வைக் கொல்லுகிறாய்/
உடலுக்குச் சூடு ஏற்றுகிறாய் /
ஆசைகளைக் கொடுக்கிறாய் /
பாசத்தைக் கேட்கிறாய்/
மோகத்தை உசுப்புறாய்/
உள்ளத்திலே துள்ளுகிறாய்/
உதட்டைக் கனவில் மெல்லுகிறாய் /
உள்ளுணர்ச்சியில்
என்னன்னமோ செய்கிறாய் /
உடையைக் கலைகிறாய் /
இடையைத் தேடுகிறாய்/
மச்சம் எண்ணிப் புன்னகை புரிகிறாய் /
இச்சுக் கொடுத்து முத்த யுத்தம் செய்கின்றாய்/
சேலையைக் கசக்குகிறாய் /
கூந்தலைக் கலைக்கிறாய் /
வேர்வைத் துளிகளை அழைக்கிறாய்/
மூச்சின் வேகம் பெருக்கிறாய் /
உத்தரவு இன்றி உள்ளே
நுழைந்தது முதல் குற்றம் /
இத்தனை மாற்றம் என்னில்
விதைத்தது இரண்டாம் குற்றம்/
ஒன்றும் அறியாதவர் போல்
காதல் தோட்டம் நட்டு காமப்
பூ பறிப்பது மூன்றாம் குற்றம் /
குற்றத்துக்கு மேல் குற்றம்
புரிந்த உன்னைக் ஓமகுண்டம்
அருகே அமர்த்துவேன் வாதாடி
போராடி ஆயுள் கைதியாக்குவேன்/
No comments:
Post a Comment