பூம் பூம் மாட்டுக்கார
சிவனேசன் வந்தான்டி /
அவன் கும்பகோண
வெத்தல போட்ட/
நம்ம நாட்டுக் குறுப்புக்
காரந்தான்டி/
ஒட்டுடையுடன் வந்திடும்
ஓட்டான்டி தான்டி/
கடட மீசையுடன் மிரட்டும் கெட்டிக்காரந்தான்டி/
முட்டும் காளையுடன்
ஒட்டிக் கிட்டான்டி/
வண்ணப் பட்டுத்
துணியெடுத்து சூடிக்கிட்டான்டி/
யாரு என்ன சொல்லிக்கிட்டாலும்
தலையாட்டிக்குவான்டி/
எதைக் கொடுத்தாலும் தட்டை நீட்டிக்குவான்டி/
நாட்டாமையைக் கண்டாக்க நின்று நடுங்கிக்குவான்டி/
வீட்டோரமா வந்து நோட்டம் போட்டுக்குவான்டி/
காட்டோரம் நடக்கையிலே
எட்டுக்கட்டிப் பாடிக்குவான்டி/
கிடைப்பதை உண்டு
ஊர் கடந்துக்குவான்டி/
உடல் வருத்தி உழைத்திடாதவன் இவந்தான்டி /
ஊரோடியும் காடோறியும்
யோம்பேறியும் இவங்கதான்டி/
No comments:
Post a Comment