ஓடுபாதையிலே ஓடாய்த் தேய்ந்த
உடலோடு /
வாட்டிடும் வெயிலில் வாட்டமான
முகத்தோடு/
கொட்டும் மழையிலும் வதைத்திடும்
பனியிலும்/
புரைந்த உடையோடும் திறந்த
மேனியோடும்/
எரியும் வயிற்றுடன் எத்தனையோ
பூக்கள் /
இடப்புறம் வலப்புறம் நடக்கிறது
மனிதயினம்/
கடக்கின்ற வழியிலே கிடத்தியபடி
உயிரினம் /
கண்டுக்காமல் பறக்கின்றது பலரது நெஞ்சம் /
கொடுக்கும் கரங்களோ குறைந்து
விட்டது /
ஏளனமாக நோக்கிடும் கண்களோ
நிறைகின்றது/
உடல் காட்டி காமப் பசி/
தீர்த்தவளின் ஈனச் செயலோ இவை/
படி தாண்டி ஆண் பிடியில் /
சிக்கி சின்னாப் பின்னமானவளின் கருவோ /
மொட்டிலே குப்பையில் கொட்டியவை கொடுமை/
எத்தனை மூச்சு விடும் பூக்கள் /
மகிழ்ச்சி இழந்து வறுமையோடு
கண்ணீர்க் /
கடலில் மிதக்கின்றன தெருவோரப் பூக்களாய்/
No comments:
Post a Comment