கொத்தோடு முல்லை
பூத்திருக்கு மாமா./
தொட்டுப் பறித்திட வா மாமா./
குலையோடு மாங்காய்
காத்திருக்கு மாமா./
கிளைக்கு வலிக்காமல்
பறித்திட வா மாமா./
கலையோடு கன்னி
காத்திருக்காள் மாமா./
கட்டுடல்லைக்
கொண்டு வா மாமா./
கரும்பாக இனித்திடும்
இதழ் இருக்கு மாமா./
எறும்பாக
சுவைத்திடவே நீ வா மாமா./
அங்கெமெல்லாம் தங்கமாய்
மின்னுது மாமா.;
ஆங்காங்கே மச்சம்
எண்ணிட வா மாமா./
பப்பாளிக் கன்னம் போர்
தொடுக்கிறது மாமா./
முத்தச் சண்டை
போட்டிட நீ வா மாமா./
கசங்காத பட்டுச்சேலை
சிணுங்கியபடியே மாமா./
கசக்கிப் போட்டிடவே நீ வா மாமா./
இளமைக் காதல்
பதவி கேட்கிறது மாமா./
தாலிப் பந்தம்
ஒன்று கொடுத்திடு மாமா./
புரியாத பாடம்
அறிந்திட ஏக்கம் மாமா./
புரிந்திடும் படி
சொல்லிட வா மாமா./
முடியாத இரவும்
அணையாத விளக்கும் மாமா./
பிடிவாதம் பிடிக்கிறது
படியேறி விரைந்திடு மாமா./
No comments:
Post a Comment