Wednesday 13 May 2020

ஓவியக் கவிதை


விடும் மூச்சுக்கும் 
ஆயுள் குறைகின்றது/
துடிக்கும் இதயமும் 
மடிந்திடும் நிலையில் /

ஓடும் குருதியும் 
ஓய்வு கேட்கின்றது/
ஆசையெல்லாம் அமைதி 
அடைந்த நிலையில்/

மோகமும் முற்றாகக்
கரைந்து செல்கின்றது/
இங்கு வந்து நீ 
உணர்ச்சியைக் கொட்டினால்/
உமக்கு மகிழ்ச்சி கிடைத்திடுமோ?

நோய் தின்று 
கொண்டு இருக்கும் உடல்/
போகத் தாயாராகி விட்ட உயிர்/
வாடிய வாறே நகரும் வாழ்வு/
இந்நேரத்தில் நீ நுழைந்திட நினைத்தால்/
என் மனம் கதவு திறந்திடுமோ? 

பாய் விரித்தால் உடன் உறக்கம்/
மறு நாள் எழுந்து விட்டேன் என்னும்/ எண்ணத்தை ஏற்றுக்கவே தயக்கம்/

ஒவ்வொரு நொடியும் மரண ஒலியே/ 
எனது காதுகளில் கேட்ட படியே/
இவ்வேளையில் வந்து நீ பக்கம் 
உறங்கிட இடம் கேட்டால் /
உனக்குக் கிடைத்திடுமோ ?பஞ்சணை சொர்க்கம்/ 


 (ஓவியருக்கு வாழ்த்துகள்)

No comments:

Post a Comment