கரை தொடும் ஆழியின்
அலை/
விரைந்து ஓடி மறைவது
நாணம்/
நேர்வழிப் பாதை
வளைவதும்/
ஓடும் நதிகள் நெளிவதும்
நாணம்/
காற்றுக்கு நாற்று தலை
சாய்ப்பதும்/
புயலுக்கு கீற்று நடிப்பதும்
நாணம்/
ஓங்கிய வாழை ஈன்ற
குலை/
பூமி நோக்கியே வளர்வதும்
நாணம்/
உயர்ந்த மூங்கில்
வளைவாகின்றதும்/
தொட்டாச்சுருங்கி சுருங்குதலும்
நாணம்/
குமரிப் பெண் முகம்
மறைப்பதும்/
கூட்டத்தில் மறைந்து செல்வதும்
நாணம்/
மாலையிட்டவன் முன் தலை
குனிவதும்/
வெட்கத்தோடு பிறக்கின்ற
நாணம்/
பெண்ணின் சொத்துக்கள்
நாணமே/
கண்டேன் அவளின் கண்ணில்
நானும்/
No comments:
Post a Comment