நடமாட்டம் கூடிப் போச்சு
முகநூலிலே புலிகள்
புகைப் படத்தோடு பல நரிகளும்
சில எலிகளும் இவை தான்
இன்றைய புதுக்கதை../
புலித்தோல் போர்த்தினாலும்
மாற்ற முடியுமோ நரிக்குணத்தை
மாற்றம் காணத குணம் காட்டிக் கொடுக்கிறது மறு கனம் அவன்
போலி முகத்தை.../
ஓடி ஒழிஞ்ச எலி எல்லாம்
புலி படத்தோடு வீரவசனம்
உரைக்கின்றதே
வேடிக்கையான கதை../
நாடித்துடிப்போடு ஈழத்தில்
போரிட்டவர்களைப் பார்த்து
சித்தரிக்கின்றனர் சிங்களவர் என்று
இது தான் நிஜத்திலே சிரிப்பை
இழுத்து விடும் கதை..../
ஆமை தண்ணீரில் போகுதே
என்று ஓநாய் அழுதுச்சாம்
ஓரமாய் போய் நின்று இது
சிறுவயதில் நான் படித்த கதை
இப்போது நடக்கும் ஆடு புலி
ஆட்டத்துக்கு பொருத்தமான கதை..../
No comments:
Post a Comment