Wednesday 27 May 2020

நரித் தோல் போட்ட புலி

நடமாட்டம் கூடிப் போச்சு 
முகநூலிலே புலிகள்  
புகைப் படத்தோடு  பல நரிகளும் 
சில எலிகளும்  இவை தான் 
இன்றைய புதுக்கதை../

புலித்தோல் போர்த்தினாலும் 
மாற்ற முடியுமோ நரிக்குணத்தை  
மாற்றம் காணத குணம் காட்டிக் கொடுக்கிறது மறு கனம் அவன் 
போலி முகத்தை.../

ஓடி ஒழிஞ்ச எலி எல்லாம் 
புலி படத்தோடு வீரவசனம்  
உரைக்கின்றதே 
வேடிக்கையான கதை../

 நாடித்துடிப்போடு ஈழத்தில் 
போரிட்டவர்களைப்  பார்த்து 
சித்தரிக்கின்றனர் சிங்களவர் என்று 
இது தான் நிஜத்திலே சிரிப்பை 
இழுத்து விடும் கதை..../

ஆமை தண்ணீரில் போகுதே 
என்று ஓநாய்  அழுதுச்சாம் 
ஓரமாய் போய் நின்று இது 
சிறுவயதில் நான் படித்த கதை 
இப்போது நடக்கும் ஆடு புலி 
ஆட்டத்துக்கு பொருத்தமான கதை..../

           

No comments:

Post a Comment