அரட்டைக்காகவா இல்லை
இடைவேளையில் காமக்
கதைத் திரட்டுக்காகவா?
புறப்பட்டு வருகின்றனர்
ஒரு சிலர் பேதைகளின்
முகநூல் பக்கங்களிலே.
நூல் விட்டு வால் விட்டு
பொய்களை அள்ளி விட்டு.
வட்டமிட்டு நோட்டமிட்டு
அப்பாவி பெண்களின்
மனவலிமையைக் கணக்கிட்டு.
கட்டுக் கதைகளை
அவிழ்த்து விட்டு
கறந்திடப் பார்க்கின்றார்கள்
காசுக்கட்டை.
அடியே முட்டாள் பெண்ணே
நீ அறிந்து உணர்ந்து நகர்ந்து
எட்டிச் செல்லடி கண்ணே.
எறும்பைக் கரும்பு கற்பழிச்சு தாம்.
இது ஒரு விசித்திரக் கதை.
அதை விம்மலோடும் அழுகையோடும்.
சொல்லிக் கொண்டு படைக்கப்
பார்க்கிரான் ஒரு சரித்திரதத்தை.
வேண்டாமடி பெண்ணே
அந்தத் தரித்திரம்
அதைத் துரத்தி விட்டு
திருத்தமான கருத்தை
நேர்மைத் திருத்தியோடு
உரைப்போரை சேர்த்தும் சேர்ந்தும்
பயணப் பட்டுக்கோடி கண்ணே.
No comments:
Post a Comment