Friday 17 July 2020

கட்டழகு கண்ணாளனே

கட்டழகு கண்ணாளனே 
எனதுள்ளம் பெட்டகமானதடா/

எட்டி எட்டி நீ  நகர்ந்தாலும் /

உனைத் தொட்டிடவே வட்டமிட்டு ஏங்குதடா /

மயக்கிடும் தேக்குமர உடல் 
கண்டு/

பாக்கு மாத்திக்க என்னிதயம் 
துள்ளுதடா/


மடிப்புக் கலையாமல் வேட்டி 
கட்டி/

உடும்புப் புடியாய்க் கரம் 
கோர்த்து /

வட்டார மக்களெல்லாம் பார்த்து வியந்திடவே /

ஊர்வலமாய் உன்னோடு வந்திட வேண்டுமடா/

மறவு மாறாத பந்தமொன்று
கொடுத்திடுடா /

உருண்டு திரண்ட அங்கத்திலே 
நானும் /

மரவுக் கவிதையொன்று படித்திட வேண்டுமடா/

அங்கொன்று இங்கொன்று பருக்கள் பூத்த /
கன்னத்திலே வெக்கத்தோடு முத்தமிட வேணுமடா /

No comments:

Post a Comment