கட்டழகு கண்ணாளனே
எனதுள்ளம் பெட்டகமானதடா/
எட்டி எட்டி நீ நகர்ந்தாலும் /
உனைத் தொட்டிடவே வட்டமிட்டு ஏங்குதடா /
மயக்கிடும் தேக்குமர உடல்
கண்டு/
பாக்கு மாத்திக்க என்னிதயம்
துள்ளுதடா/
மடிப்புக் கலையாமல் வேட்டி
கட்டி/
உடும்புப் புடியாய்க் கரம்
கோர்த்து /
வட்டார மக்களெல்லாம் பார்த்து வியந்திடவே /
ஊர்வலமாய் உன்னோடு வந்திட வேண்டுமடா/
மறவு மாறாத பந்தமொன்று
கொடுத்திடுடா /
உருண்டு திரண்ட அங்கத்திலே
நானும் /
மரவுக் கவிதையொன்று படித்திட வேண்டுமடா/
அங்கொன்று இங்கொன்று பருக்கள் பூத்த /
No comments:
Post a Comment