கடந்த காலம் வாழ்வைப்
புரட்டிப் போட்டது.
நிகழ் காலம் ஆசைகளை
உடைத்துப் போட்டது.
எதிர் காலம் பெரிதாக
எதைக் கொடுக்கப் போகின்றதோ?
உள்ளத்திலே
ஒவ்வொரு நினைவுகளும்
உளியாகக் குத்துகின்றது.
இதயத்திலே நிறுத்திய
எண்ணமெல்லாம்
ஊசி போல் தைக்கின்றது.
நெஞ்சத்திலே படர விட்ட
கற்பனையெல்லாம்
கரிகிப் போகின்றது.
ஆயிரம் ஆயிரம் எதிர்
பார்ப்புக்கள் எல்லாம்
கண்களோடு
நின்ற வாறே எரிகின்றது.
ஊமையாக மனம்
தனிமையிலே அழுகின்றது.
உண்மையிலே என் ஆத்மா
அனாதையாக அலைகின்றது.
No comments:
Post a Comment