Thursday 30 July 2020

பிள்ளை அணிலே



பிள்ளை அணிலே நீ
மெல்லச் சொல்லு.
மஞ்சள் வண்ணக் கனியை
மென்ற பின்னே சொல்லு.

நெஞ்சத்திலே மண்டியிட்டு
மனசுக்குள்ஆசையைத் 
தூண்டி விட்டு.
காதல் கவிதையொன்றை
கிள்ளி விட்டு.
என்னைக் கவிஞர்களின்
கடலுக்குள்ளே தள்ளி  விட்டவனின்
தோட்டம் சென்றாயா.
அங்கே அவனைக் கண்டாயா.

வண்டி ஓட்டி வந்து 
தண்ணித் தொட்டியருகே நின்று.
கண்டிக் குளிரில் சிக்கிய உடல் போல
இந்தப் பெண்டியை நடுங்க வைத்துச் சென்ற அந்தப் பண்டிதர் முகம் கண்டாயோ 
இல்லை பட்டணம் தான்  சென்று விட்டாரோ.
நீயும் எட்ட நின்று பார்ந்து வந்திடுவாயோ?

No comments:

Post a Comment