Wednesday 17 August 2016

கருவாப் பையா

உன் மௌனத்தை உடைச்சி.
மயக்கத்தை உள்ளே அனுப்பி.
விருப்பத்தை அமர்த்தி.
இரக்கத்தை நிறுத்தி.
கருணைவார்த்தைகளைப் பெருக்கி.
காதல் சுவர் கட்டவைக்கப் போறேன்டா
கருவாப்பையா......///

உன் துரு துரு பார்வைக்குள்.
என் முகத்தை முன் அமர்த்தி.
உன் கரு விழிக்கு அதனாலே திரை போட்டு.
உன் புன்னகை  பூத்த இதழ் மேல்.
இந்த பூவையின் பெயரை.
தேனாக இனிக்கும் படி சொல்ல வைக்கப்
போறேன்டா கருவாப்பையா .....///

ரோமத்தை சுமர்ந்த படி  ருத்திர தாண்டவம்
ஆட வைக்கும் கோபத்தை  மறைத்துள்ள
உன் மார்வுக்குள்  என்றும் நிறைந்த
இடமாக என்னை உறங்க வைக்கும்
உன் விருப்பத்தை திறக்க வைக்கப்
போறேனடா கருவாப்பையா ...////

அளந்து பொருள் கொடுத்து
எண்ணிப் பணம் எடுக்கும்.
உன்னிரண்டு கரங்களோடு.
என்னிரண்டு கரங்களையும்
கோர்க்கும் எண்ணத்தை
கூட்டி விடப்போறேனடா கருவாப்பையா ....///

விண் நோக்கி மண் நோக்கி
மரம் நோக்கி மழலையின் கரம் நோக்கி
கவிதை எழுதும் உன்னை என் கண் நோக்கி
கவிதை எழுத வைக்கப் போறேன்டா கருவாப்பையா....///

என் சிரிப்புக்குப் பின்னாடி
சிதறிக்கிடப்பது நீ சிந்தி
நான் பொறுக்கியதாக நினைத்த
கற்பனை முத்தங்கள் தானடா
கருவாப்பையா என் கருவாப்பையா.....///

No comments:

Post a Comment