Wednesday 17 August 2016

எதை நோக்கிப் போகிறது சுதந்திரம்


எங்கு இல்லை
எதில் இல்லை
சுதந்திரம்
என்னும்
வார்த்தை.

அவை
சோர்ந்து
போகின்றது
அரச
தந்திரங்களால்.

ரத்தத்தின்
ரத்தமென
மேடைக்கு
மேடை பேச்சி.

மொத்தத்தில்
மொழியால்
பிரித்து
தமிழனுக்கு
எதிலும் வழி
இல்லாது போச்சி.

முன்னேற்றுவேன்
முன்னேற்றுவேன்
நாட்டை என்று
அரசியலின்
தாகை மந்திரம்

விலை ஏற்றி
விலை ஏற்றியே
வீனாகப்
போகின்றது
கூழிகளின்
அன்றாட
வாழ்வு
மாத்திரம்

சுதந்திரம்
இல்லை
அதை நாடி
ஓடுவோருக்கு
சோறும் இல்லை.

எதை நாடிப்
போகின்றதோ
இந்த
சுதந்திரம்
என்னும் சொல்.

எங்கும் ஊழல் 
அரச
காரியாலயத்தில்
நுழைந்ததுமே
தேடல்
உருப்படியாக
ஒரு காரியம்
துட்டு இன்றி செய்ய
வழி உண்டா.

பக்கத்துக்குப்
பக்கம்
பொதுச் சேவை
என்று
அறிவிப்பு பலகை.

அங்கே
பொத்திய
வண்ணம்
அபகரிக்கான்
ஏழையின்
கை இருப்பை.

இதில் மனிதனுக்கு
எங்கே சுதந்திரம்.

பாதைக்குப்
பாதை மதுக்
கடை நடை பாதையிலே
நடக்கவே
மாதுக்குக்  தடை.

போதையில்
தள்ளாடும்
பித்தர்கள்
தாவணி
தொட்டு இழுப்பான்
என்னும்
அச்சம்  இதில்
பெண்ணுக்கு எங்கே
சுதந்திரம் .

நினைத்த
நேரத்தில்
பாதையில்
நடக்கத் தடை

நினைத்த படி வாழ
சமூதாயத்தில் தடை
சுதந்திரம் என்னும்
வார்த்தை சொல்
அளவுதான்
அவை பறந்து
விட்டது பல விதத்திலும்
சில மதத்திலும்.

No comments:

Post a Comment