்
வார்த்தைக்கு வார்த்தை அன்பு மொழி பேசி
வரிக்கு வரி வாழ்த்துக் கவி பாடி வருவோர் போவோர்
எல்லாம் உயர்வாக பேசி உசுப்பேத்தியே பழக்குலையை உசுப்பி
பழம் பறிப்பதுபோல் பணம் பறிக்கும் உலகமடா .
நுனி நாக்கில் தேன் சொட்ட
அடி நாக்கில் விஷம் கொட்ட
கொடிய நாகத்தை விட விஷமத்தனம்
நிறைந்த கோடான கோடி மக்கள் வாழும் உலகமடா
நம்பிக் கெட்டு நம்பிக்கை இழந்து
அதை சொல்லிப் புலம்பிய படியே
எத்தனையோ மனிதர்கள் வாழ்க்கை
ஓட்டும் உலகமடா
அம்மாடி ஆத்தாடி நயவஞ்சகம்
நெஞ்சில் சுமந்த படியே பல நல்ல
வேடம் தரித்து வாழும்
மனிதர்களோ வாழும் உலகமடா
யாரை நொந்து என்ன பயன்
நாம் வாழும் உலகிலே பிறந்து
விட்டோம் என்று கலங்கிய படியே
மனிதன் வாழும் உலகமடா
இறந்து மீண்டும் பிறப்பு உறுதி
என்றால் அப் பிறவியிலும் இக் கொடுமைகளை
காணும் வரம் வேண்டாம் மண் உலகில்
இனி ஒரு பிறவி வேண்டாமடா
No comments:
Post a Comment