Thursday 4 August 2016

எதுகை மோனை கவி

நெல் வளர்த்த பூமியில்
புல் வளர்கின்றது
வில் ஏந்தும் உரியவரே
கல் எடுத்தார் மனை கட்டவே.

பல் இல்லாப் பாட்டிக்கு வண் பிடிப்பு
சொல்ல முடியாக் களிப்பு
இல்லத்தாருக்கோ  ஒரே  வியர்ப்பு
சில்லென முகத்தில் சிரிப்பு.

பல்லக்கில் பவனி வந்தவள்
வல்லலாள் அவள்
நல்ல உள்ளம் கொண்டவள்
கல் நெஞ்சையும் கரைய செய்பவள்.

தனக்கென ஒரு இல்லம் அமைத்து
மனக் கசப்பினால்
இனத்தாரை விட்டு விலகி
கனத்த மனசுடன் தனித்து வாழ்கின்றாள்.

      

No comments:

Post a Comment