Tuesday 2 August 2016

என் வாழ்த்து

பல ஆண்டு காலமாக முகநூல் 
உபயோகிப்போர் எதையும்
தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தையும்
எதிர் கொள்ளும்  தையிரியத்தையும்
பெற்று விடுகின்றனர்   ஏன் ?? எனில்

இக்களத்தில் தான்
பல்லியும் உண்டு
முதலையும் உண்டு  .

கரப்பான் (பூச்சி) உண்டு
(பிறரை) கரைப்போரும் உண்டு .

சில்லறையை கறப்பவனும் உண்டு
சிறப்பாக உரைப்பவனும் உண்டு .

சிரித்துப் பேசி மயக்குவோரும் உண்டு
முறைத்து வெறுப்போரும் உண்டு .

பிறர் பணத்தை தன் பணமாக
நினைப்போரும் உண்டு
தன் பணத்தை பிறருக்கு
தானம் கொடுப்போரும் உண்டு .

நம்ப வச்சி கெடுப்போரும் உண்டு
நயவஞ்சகத்தோடு நெருங்குவோரும் உண்டு .

நயமாக பேசி நாணத்தோடு வாழ்வோரும் உண்டு
நானயத்துக்காக தன் மானம் இழப்போரும் உண்டு .

கொடுக்கும் கரங்களை எடுக்கும்
முன் தம்பட்டம் அடிப்போரும் உண்டு
கொடுத்ததையும் எடுத்ததையும்
மறப்போரும் உண்டு .

தன்னைத் தானே புகழ்வோரும் உண்டு
பிறர் புகழ்வதை ஏற்க மறுப்போரும் உண்டு .

இப்படி எத்தனையோ போலி முகங்களை
சமாளித்து முகநூலிலே சாதனை
புரிகிறார்களே அவர்களுக்குத்தான்
என் வாழ்த்தும் உண்டு.

No comments:

Post a Comment