Tuesday 16 August 2016

உன்னால் உயித்திடுவேன்

தினமும் இறப்பது
போன்று கனவு உண்டு
ஆனால் உன் நினைவால்
உயித்தெழுகிறேன்.
பொல்லாத சமுதாயம்
கொல்லாமல் கொல்லுது.
இருந்தும்  உன் அன்பு வரம்
பெறவே உயிர் வாழ்கிறேன் .,

நீ கொடுக்கும் ஆசை
முத்தம் சேகரிக்கவும்.
உன் தோள் சாய்ந்து
கதை அளக்கவும்.
வேண்டும் என்று
வேண்டாம் என்று சொல்லாமல்.
உயிர் மூச்சுக்காற்றைப்
பிடித்து உயிர் வாழ்கிறேன்.

விக்கல் வரும் போது
எல்லாம்  உன் சொற்கள் .
வந்து முட்டுகிறது
நெஞ்சினிலே மின்னலாய்.
மீண்டும்  உன் குரல்
வழி உரை கேட்கவே.
மரண வாசல் தேடும்
என் ஜீவனை பிடித்து வாழ்கிறேன்.

வேட்டைக் காரன் போல் நீ என்னை .
காதலால் வாட்டி கை விட்ட போதும்.
கலங்கும் விழிகள்
காத்திருக்கிறது உன்னை.
முகம் பார்க்க என்பதற்காகவே
இமை மூடாது வாழ்கிறேன்.

கொஞ்சம் கொஞ்சமாக
இறக்கிறது உனை
சுமக்கும் இதயம்.
மெது மெதுவாக
மடிகிறது ஆசையோடு
எதிர் பார்த்த உள்ளம்.
சோர்ந்து போகிறது
நீ தான் சொந்தம் என
நினைத்த பெண்மை.
வயதும் படிப்படியாக
காட்டுகின்றது காட்டு வாழி
ஆனாலும் நான் வாழ்கிறேன்.

நீ சொல்லி விடு என்
துணை நீதான் பெண்ணே என்று
இத்தனை வேதனைக்கும்
ஒரு சவால் விட்டு..
பனித்துளி கண்டு
நிமிர்ந்த புல் போல் நிமிர்ந்து
உயித்தெழுகின்றேன்
உன்னால்  உன்னாலே தான்
உயிர்திடுவேன் .என் நாளும்.

No comments:

Post a Comment