ஏமாற்றி ஏமாற்றி ஏணி ஏறவே
நினைப்போர் தான் நிறைந்து
வருகின்றார்கள் உலகினிலே
ஊரார் பணத்தை ஓடி வாரி
சுறுட்டுவோர் விலாசம் கிடைத்தால்
காட்டிக் கொடுப்பேன் கவிதையினாலே
பொய் முகம் காட்டி பொய் உரைக்கும்
ஆசாமிகளின் முகத்திரை
கிழிப்பேன் கவிதையினாலே
ஊதி அனைக்க. நின்று எரியும்
தீபம் இல்லை என்றும் நின்று
ஒளி கொடுக்கும் கதிரவன் என
உணர்த்துவேன் கவிதையினாலே
தீச்சுடர் போல் வரிகளினாலே
அனல் பறக்கும் சொல் எடுத்து
எரிமலை போல் வார்த்தை கொண்டு
சுட்டெரிப்பேன் நான் கவிதையினாலே.
No comments:
Post a Comment