Sunday 31 July 2016

கவிதையினாலே

ஏமாற்றி ஏமாற்றி ஏணி ஏறவே
நினைப்போர் தான் நிறைந்து
வருகின்றார்கள் உலகினிலே

  ஊரார் பணத்தை ஓடி வாரி
சுறுட்டுவோர்  விலாசம் கிடைத்தால்
காட்டிக் கொடுப்பேன் கவிதையினாலே 

பொய் முகம் காட்டி பொய் உரைக்கும் 
ஆசாமிகளின் முகத்திரை 
கிழிப்பேன் கவிதையினாலே  

ஊதி அனைக்க. நின்று எரியும்
தீபம் இல்லை என்றும் நின்று
ஒளி கொடுக்கும் கதிரவன்  என
உணர்த்துவேன் கவிதையினாலே 

தீச்சுடர் போல் வரிகளினாலே
அனல் பறக்கும் சொல் எடுத்து
எரிமலை போல்  வார்த்தை கொண்டு
சுட்டெரிப்பேன் நான் கவிதையினாலே.

                     

No comments:

Post a Comment