பெண்ணே என்றான்.
கண்ணே என்றான்.
அழகே என்றான்.
அமுதே என்றான்.
கிளியே என்றான்.
கட்டிக் கனியே என்றான்.
என் உயிரே என்றான்.
உன் நிழல் நானடி என்றான்.
மதி மயங்கினேன்.
புத்தி இழந்தேன்.
யுத்தியைத் தள்ளி வைத்தேன்.
அவனே கெதி என நினைத்தேன்.
கதை கதையாக அளந்தேன்.
காதல் கீதம் இசைத்தேன்.
கைக் கூலி என்ன கொடுப்பாய் என்றான்.
என்னைக் கொடுப்பேன் உள்ளத்தைக்
கொடுப்பேன் என்றேன்.
கை கொடுத்து கை அசைத்து
சென்றான்.
என்னிடமும் என் காதலிடமும்
விடை பெற்று விட்டான்.
இனி தடை இல்லை அவன்
கால்கலுக்கு.
No comments:
Post a Comment