Thursday 14 July 2016

என் உயிரில் கலந்த சொந்தம்


ஊரார்  முகம்  சுளிக்கையில்
உறவுகள் ஒதிங்கி  நிற்கையில்
பெற்ற பிள்ளையும் பார்க்காது வெறுக்கையில்
நான்  மட்டும் ஒட்டிக்
கொண்டேன்  அவர் தோள் சாய்ந்துகொண்டேன் .!!!

சுகம்  கொடுக்காமல் போனாலும்
என் சுமையை அவர் தோள் தாங்கும்
என்னும்  நம்பிக்கையில்...!!

ஊரார் கண்ணுக்குத் தெரிவது
உடலில் உள்ள அசிங்கம் என் கண்ணுக்குத்
தெரிவது அவர் உள்ளம்...!!

உருவம் இல்லாத காதலோடு நாங்கள்
வாழ்க்கை நடத்துவதால் உருவத்தில்
உள்ள குறையை என் கண் கண்டு
கொள்வது இல்லை....!!

அவர் என் உயிர் அவர் என் வாழ்வு
அவர் என் கணவன் அவர்தான்
என் உலகம் கணவனே கண் கணட
தெய்வம் என்பார்கள் அது நிஜமா
பொய்யா அதை நான் அறியேன்  ஆனால்
என் உயிரே இவர்தான்  என் மூச்சே
இவர்தான் ....!!

அன்பான மனைவியின்
ஆரோக்கியமான வார்த்தை.

         

No comments:

Post a Comment