Friday 29 July 2016

விடை தெரியாமலே


எனக்கும் காதல் ஆசை
வந்தவை தப்பா
இல்லை அந்த
ஆசை உன் மேல்
வந்தது தப்பா நான்
அறியாத விடையெடா....!!

ஆசையோடு உன்னை
நெருங்கி நாளு வார்த்தை
அன்பாகப் பேச வரும்
போது நீ காட்டும்
அலட்சியமோ என் மனதை
ரணமாக்குதடா...!!!

ஆசையைக் கூறவும்
முடியாமல் உன்னிடம்
மறக்கவும் முடியாமல்
உன்னை நான்
உயிரோடு நடமாடும்
பிணம் போல்
ஆனேனடா ....!!!!

இரத்தமும் தசையுமாக
இருந்த என் இதயம்
இன்று உன்
வெறுப்பையும்
முறைப்பையும்
பார்த்துப் பார்த்து
கொஞ்சம் கொஞ்சமாக
ஏங்கியே இறக்கின்றதுதட.!!!

மன வளர்ச்சி
இல்லாதவர்களுக்கு
மறு வாழ்வு உள்ளதட..
என் வாழ்வோ உன்
இல்லமட...

என் ஆசை  தஞ்சமானதோ
உன் நெஞ்சமட.இவை
இல்லை என்றால்
இந்த வஞ்சி நெஞ்சம்
பஞ்சாக  ஆனதுடா....

  

No comments:

Post a Comment