Friday 29 July 2016

கொடுமை

போட்டியும் பொறாமையும் ஈட்டியின் முனைபோலே
எதிரியையும் கொல்லும் குறி தவறினால்
நோக்குவோரையும் கொல்லும்  
குறை கூறாத விழா இல்லை குறை கூறவில்லை
என்றால் அது முழுமையான விழாவும் இல்லை
தோள் கொடுப்பான் தோழன் என்ற சொல்
தொலைந்து விட்டது தோள் கொடுக்க
வருவோரையும் துரத்தி அடிக்கும் கரங்கள்
நிறைந்து விட்டது 

வாயாலே வாழ்த்துரைக்கான் (ள் )
வந்து நின்று போற்றி முடிக்கான் (ள் )
சென்ற பின்னே தூற்றி இருக்கான் (ள் )
பொல்லாத உலகமடா நாம் வாழும் சமுதாயமடா 

கொடுவார் கொடுக்க இடையிலே பெகுண்டு
எழுகின்றான் கெடுக்க
நேரம் ஒதிக்கி செய்தி கொடுக்கான் (ள் )
பணம் செலுத்தி தொலைபேசி எடுக்கான் (ள் )
பொறாமை தீயினிலே வெந்து துடிக்கான் (ள் )

வேண்டாம் வேண்டாம் நட்பு என்று
வந்து நட்டப் படுத்த வேண்டாம்
உறவு என்று கூறி குழியில் தள்ள வேண்டாம்
பாசம் என்று உரைத்து
பாசானம் கொடுக்க வேண்டாம்
கொடுமையிலும் கொடுமை நம்பி இருப்போரை
நம்ப வைத்து கழுத்தை அறுப்பவைதான்
பெரும்   கொடுமை.

     

No comments:

Post a Comment