வாழ்க்கையை மனம்
வெறுக்கின்றது
இருந்தும் மரணத்தை
நெருங்க அது பயம்
கொள்கின்றது...!!!
வேதனை நிறைந்து
விட்டதாலே நெஞ்சில்
இன்பத்துக்கு இடம்
இல்லாமல் போய்
விட்டது.....!!!
ஆசையோ அளவு
இல்லாமல் வருகின்றது
சிறு துளி யேனும் நிறை
வேறாமல்
மறைகின்றது...!!
சோகம் என்னை
விலை கொடுத்து
வாங்கி விட்டதோ
நான் அறியேன்
சந்தோசம் என்னை
வெறுக்கின்றது...!!!
காதல் கொள்ள
முடியாத பதுமை
நான் வாழ்க்கை
இல்லா வாழ்கையாக
வாழும் ஜீவன்ஆனேன்...!!
ஓ...இறைவா நீ
கொடுத்த வரமா
இது இல்லை நான்
பெற்ற சாபமா இது
சொல்வாயா..??
உன்னை நான்
நேசிக்கும் பெண்
இருந்தும் சொல்ல
முடியாத நிலமையை
கொண்ட பாவி நான்
அன்பே நீ என் உயிர்
நான் உன்னை சுமக்கும்
உடலானேன்....!!
உன்னை நினைத்து
நினைத்து நொந்த
உள்ளம் வெந்த பின்னும்
உன் பெயரையே மெதுவாக
உச்சரிக்கின்றது....!!
காதலா இல்லை
கானலா எதுவாக
இருப்பின் உன்
நினைவே என் வாழ்வு
நொந்த உள்ளத்துக்கு
மருந்தாக உன்னுடைய
பெயர் தான் அன்பே...!!!
No comments:
Post a Comment