Friday 29 July 2016

உள்ளமது

முத்துப் போல் சொத்தாக
உனை நான் சேர்த்தேன்
சத்தம் இன்றி யுத்தம் இன்றி
நீயும் எனை அடைந்தாய்....\

செத்த பின்பும் உனைச்
சுற்றும் என் ஜீவன் இது
தேவலோக தேவதை மேல்
சத்தியமே என் ராசா.....\

உனை மட்டும் என் உள்ளம்
தேடுதே நாடுதே உனை
அடைய பல வழி பார்க்கின்றதே
இது உமக்கு தெரியாதோ என் ராசா....\

துணை ஒன்று தேவை அவை
நீயாக வேண்டும் என்று தொழாத
நாள் இல்லையே நான் ராசா....\

தொட்டு விட மட்டும் இல்லை
தூக்கி விடும் கரமும் உன்
கரமாகவே இருக்க வேண்டும்
என்று கரகாட்டம் போடுதையா
ரோஜா பூ  போன்ற
என் உள்ளமது  ராசா.....\

      

No comments:

Post a Comment