நேரமும் காலமும்
எனை விட்டு விரைந்து
செல்கின்றது .
கவலையும் சோகமும்
எனை நெருங்கியே
வருகின்றது.
கற்பனையும்
கனவும் கலைந்தும்
மறைந்தும் செல்கின்றது.
காதலும் ஓவியமும்
தொடர மறுக்கின்றது.
ஆனால் உன் நினைவு மட்டும்
என்னை இறுக்கப்
பிடித்து முறுக்காய்
நொறுக்குதுடா என்
இதயத் தினுசுகளை.
No comments:
Post a Comment