Friday 29 July 2016

மனிதம் இல்லா மனிதன்


படிப்பு அறிவு
இல்லாத சில
பாமர மக்களை
பணத்தைக் காட்டி
மனதை மாத்தும்
சில முதலாளிகள்...!!

இவர்கள் கொடுமை
உலகில் பல பாகங்களில்
தலை விரித்தாடுகின்றது
எமனுக்கு ஓலை அனுப்பும்
இவர்களை முட்டாள்
மக்கள் இறைவனாகப்
பார்வையிடுவது தான்
மனதில் வேதனை...!!

அவர்களின் அறியாமைத்
தனத்தால்  எத்தனையோ
மழலைகளையும்  சில
முதியோரையும் வாரி
சுருட்டி தூக்கி எமனிடம்
கொடுக்கும் நிலமை...!!

உழைப்பின் ஊதியக்
குறைவால் ஏழைகள்
தங்கள் உடல் நலம்
பற்றிக் கவலை கொள்வது
இல்லை  எங்கே மலிவான
விலையில் பொருட்கள்
கிடைக்கின்றதோ அதையே
விரும்பி வாங்குகின்றனர்...!!

ஐம்பது பைசா மிச்சம்
பிடிப்பதாக நினைத்து
ஐம்பதாயிரம் செலவு
செய்ய வேண்டிய ஒரு
நோயைத் தேடி எடுத்து
விடுகின்றனர்...!!!

ஆம் எங்கு கோழிப்
பண்ணை இருக்கின்றதோ
அங்கே இந்த(..ஈ)த் தொல்லை
இருக்கும்  இதைப் படித்த
மக்கள் அறிந்துள்ளதால்
அவர்கள் குடியிருக்கும்
குடிருப்பு பகுதியில்
பண்ணை கட்ட அணுமதி
கொடுப்பது இல்லை...!!!

இதனாலயே  சில
முதலாளிமார்களின்
பார்வை கிராமத்தின்
பக்கம் சாய்கின்றது
ஆசை வார்த்தை பேசி
அவர்களை ஏமாற்றி
விடுகின்றனர் வேலை
தருவதாகவும் விலை
குறைவாக கோழி..முட்டை
கொடுப்பதாகவும்  கூறியே...!!

பாவம் அவர்களும்
இதை நம்பி ஏமாந்து
விடுகின்றனர் (ஈ)யால்
வரும் நோயை அறியாத
மக்கள் இது கொடுமையிலும்
கொடுமையானது...!!!

        

No comments:

Post a Comment