தடம் புரண்டு ஓடும் நீர் 
தண்டபாலம் தாண்டி ஓடும் 
தவறாமல் பள்ளம் சேரும் 
இடம் தேடி ஓடையிலே ஓடை 
நீரை தழுவியே ஓடையை 
நிறைப்பியே ஓயாமல் ஓடும் 
ஓடும் வளியில் மோதும் 
மலையில்  தடங்கள் வந்தாலும்  
பெருக்கு எடுத்த நீர் பொறுத்து நிற்காது  
தென் படுவது அனைத்தையும் 
நொறுக்கியாவது கடக்க நினைக்கும் 
கிணற்று நீரை போல் அடை படாமலே 
ஆறு குளம் காணும் வரை ஓடும் நீரைப்போல் 
நீயும் துணிந்து ஓடு நிலத்தின் மேல் 
வாழும் போதே நினைவில் இருக்கும் படி
 உன் பெயரைப் பதிய விடு நல்லோர் 
சான்றோர் நெஞ்சினிலே...
No comments:
Post a Comment